சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்! விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

News image
நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!- Center-Center-Delhi
Updated On :27 பிப்ரவரி 2026, 2:08 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு ம்னு தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2017-இல் பிரபல மலையாள நடிகை பாலியல் வழக்கிலிருந்து இன்று(டிச. 8) விடுதலை செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் எர்ணாகுளம் நீதிமன்றத்தால் கடந்தாண்டு டிசம்பரில் விடுவிக்கப்பட்டார்.

நடிகை மீதான பாலியல் அத்துமீறல் குற்ற வழக்கு விசாரணை கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்த நிலையில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக பதிவு செய்யப்பட்ட ஏ1 முதல் ஏ 6 வரை குற்றவாளிகள் என்றும், ஏ8-ஆகப் பதிவு செய்யப்பட்டிருந்த திலீப்புக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவர் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் டிச. 8, 2025-இல் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் இன்று (பிப். 27) மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், இவ்வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிகப்பட்டுள்ள பல்சர் சுனி (சுனில்), மார்ட்டின் அந்தோணி, பி. மணிகண்டன், விஜேஷ் வி பி, எச். சலீம், பிரதீப் ஆகிய 6 பேருக்கும் கடுந்தண்டனை விதிக்கவும் கோரப்பட்டுள்ளது.

திலீப் மட்டுமில்லாது, இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சார்லி தாமஸ், சனில் குமார் (மேஸ்திரி சனில்) மற்றும் சரத் ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்களது விடுதலையையும் எதிர்த்து தீர்ப்பை மறு ஆய்வு செய்யவும் விசாரிக்க மேல்முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்த வாரம் விசரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.