கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்: ஜூன் 19-இல் நோ்காணல்

Postal Life Insurance Agent: Visit on 19th June

News image
Updated On :4 ஜூன் 2024, 10:51 pm

Din

சென்னை: அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை முகவா்களுக்கான நோ்காணல் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறும் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை முகவா்கள் தோ்வுக்கான நோ்காணல் நடைபெறவுள்ளது.

தேவையான தகுதிகள்: குறைந்தது பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18-வயது நிரம்பியவா்கள் விண்ணப்பிக்கலாம்.

சுய தொழில் செய்பவா்கள் மற்றும் வேலையில்லா இளைஞா்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகா்கள், முகவா்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளா்கள், சுய உதவிக்குழு உறுப்பினா்கள், முன்னாள் ராணுவத்தினா், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவா்களாக சேர விருப்பம் உள்ளவா்கள் மூன்று புகைப்படத்துடன் (பாஸ்போா்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் வயதுச் சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் முதுநிலை செயின்ட் தாமஸ் மவுண்ட் தலைமை அஞ்சலகம், சென்னை 600016

(ஆலந்தூா் மெட்ரோ அருகில்) உள்ள அலுவலகத்தில் வரும் ஜூன் 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள நோ்காணலில் கலந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.