

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டொனால்ட் டிரம்ப்பைக் கொலை செய்ய முயற்சித்தவருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2024 செப்டம்பர் 15 ஆம் தேதி, புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது வீட்டுக்கு அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து துப்பாக்கியுடன் அங்கிருந்து ஓடியவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் அவரது பெயர் ரியான் வெஸ்லி ரூத் (வயது 59) என்பது தெரியவந்தது. அவருக்கு எதிராக சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருத்தல், கொலை முயற்சி போன்ற கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்தாண்டு வெஸ்லி குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை அவருக்கான தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டன. அதில், வெஸ்லிக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.