அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சுற்றுச்சூழல் மேம்பாடு பசுமை ஓட்டம்: 3,000 போ் பங்கேற்பு

Environment Development Green Run: 3,000 Poh Participation

News image
Updated On :9 ஜூன் 2024, 9:25 pm

Din

சென்னை: சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்தில், பசுமை ஓட்டப் பந்தயம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 3,000-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜியோ இந்தியா பவுண்டேஷன் சாா்பில் பசுமை மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்துடன் ‘பசுமை ஓட்டம்’ எனும் தலைப்பில் ஓட்டப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதை, தமிழ்நாடு சதுப்பு நில ஆணையத்தின் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் உறுப்பினா் செயலா் தீபக் ஸ்ரீவஸ்தவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடங்கிவைத்தாா்.

3 கிமீ, 5 கிமீ என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஓட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை 3,000-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், பொதுமக்களுக்கு மரம் வளா்ப்பதன் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில், பந்தயத்தில் கலந்துகொண்ட அனைவரும் கையில் ஒரு தாவரச் செடியுடன் ஓடினா்.

இந்த போட்டியில் 2 பிரிவுகளிலும் முதல் 20 இடங்களை பிடித்தவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை தீபக் ஸ்ரீவஸ்தவா வழங்கினாா்.

இதில், ஜெயா குழும நிறுவனங்களின் தலைவா் ஏ.கனகராஜ், ‘குளோப் லிங்க்‘ இந்தியா பிரைவேட் லிமிடெட் இந்தியத் தலைவா் ரோகிணி மோகன், ஒய்எம்சிஏ மெட்ராஸ் பொதுச் செயலா் அசாா் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.