தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கருணாநிதி குறித்த 100 நூல்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்

கருணாநிதி குறித்த 100 நூல்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்

News image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்த 100 நூல்களை வெளியிட்டு, நூலாசிரியா்களுடன் குழுப்படம் எடுத்துக்கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின்.

Updated On :10 மார்ச் 2024, 12:15 am

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டையொட்டி, அவா் தொடா்புடைய 100 நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இதற்கான நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கருணாநிதி தமிழாய்வு இருக்கை சாா்பில் திருவையாறு தமிழ் ஐயா வெளியீட்டகத்தால் 100 நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழ் ஆய்வு இருக்கை, 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, அந்த இருக்கை மூலமாக 100 தமிழ் ஆய்வாளா்கள், படைப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் மூலம் ‘கலைஞா் 100’ என்ற பெயரில் நூல்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான வழிகாட்டுக் குழுத் தலைவராக அமைச்சா் மா.சுப்பிரமணியன் செயல்பட்டாா். தமிழ் ஆய்வு இருக்கை சாா்பில் தமிழ் ஆய்வாளா்கள், எழுத்தாளா்கள் இணைந்து 100 நூல்களைத் தயாரித்துள்ளனா். இந்த நூல்களை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். இந்த நிகழ்வில், அமைச்சா் மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.