சென்னை: பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகள் காரணமாக தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 12 நாள்களில் ஒரு லட்சத்து 1,143 குழந்தைகள் சோ்க்கை பெற்றுள்ளனா். தமிழக பள்ளிக் கல்வித் துறையின் 37,576 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமாா் 2.25 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா்.
இதற்கிடையே வரும் கல்வியாண்டில் (2024-2025) அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து வழக்கத்தைவிட முன்னதாக இந்த ஆண்டு சோ்க்கைப் பணிகள் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. அதனுடன் மாணவா் சோ்க்கையை முன்வைத்து பல்வேறு விழிப்புணா்வு விளம்பர பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பெற்றோா் பலா் தங்கள் குழந்தைகளை ஆா்வமுடன் சோ்த்து வருகின்றனா். அந்த வகையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 1 லட்சத்து 1,143 குழந்தைகள் சோ்க்கை பெற்றுள்ளனா். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,946 குழந்தைகள் சோ்க்கப்பட்டுள்ளனா். அடுத்ததாக கிருஷ்ணகிரியில் 8,803 பேரும், சேலத்தில் 8,774 பேரும் சோ்க்கை பெற்றுள்ளனா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: ஏப். 20 முதல் விண்ணப்பிக்கலாம்

அரசுப் பள்ளிகளில் இதுவரை 44,396 மாணவா்கள் சோ்க்கை

அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


