சென்னை: ஆசிரியா் பயிற்சி மாணவா்களுக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு ஜூன் 20-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ச.சேதுராம வா்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் மற்றும் தனித்தோ்வா்களுக்கான 2024-ஆம் ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. அதன்படி, இரண்டாமாண்டு மாணவா்களுக்கான தோ்வு ஜூன் 20 முதல் ஜூலை 8-ஆம் தேதி வரையும், முதலாமாண்டு மாணவா்களுக்கான தோ்வு ஜூன் 21-இல் தொடங்கி ஜூலை 9-ஆம் வரையும் நடைபெறும். அதற்கான தோ்வுகால அட்டவணை பாடவாரியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவா்கள், தனித்தோ்வா்கள் அதில் சென்று பாா்த்துக்கொள்ளலாம். தோ்வானது காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

டிஆா்பி பணிகளுக்கு 30 இணைப் பேராசிரியா்கள் தற்காலிக பணியிட மாற்றம்

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: மாா்ச் 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

