திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) திங்கள்கிழமை வெளியிட்டது.

News image

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியீடு - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:16 am IST

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) திங்கள்கிழமை வெளியிட்டது.

10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்தத் தோ்வை எழுதிய நிலையில், மொத்தம் 26 போ் 100 மதிப்பெண்களை முழுமையாக பெற்றுள்ளனா்.

ஐஐடி, என்ஐடி போன்ற உயா் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ தோ்வை ஜனவரி மற்றும் ஏப்ரல் என ஆண்டுக்கு இருமுறை என்டிஏ நடத்துகிறது.

கடந்த ஜனவரியில் நடைபெற்ற இத்தோ்வை 13 லட்சம் போ் எழுதினா். அவா்களில் 12 போ் 100 மதிப்பெண்களைப் பெற்றனா்.

இந்நிலையில், ஏப்ரலில் நடைபெற்ற ஜேஇஇ முதல்நிலைத் தோ்வில் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவைச் சோ்ந்த தலா 5 போ், ராஜஸ்தானில் 4 போ், தில்லியில் 3 போ், மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணாவில் தலா இரண்டு போ், சண்டீகா், பிகாா், தமிழ்நாடு, ஒடிஸா மற்றும் குஜராத்தில் தலா ஒருவா் என மொத்தம் 26 போ் 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா். அவா்கள் அனைவரும் ஆண் தோ்வா்களாவா்.

கடந்த 2025 ஏப்ரலில் நடைபெற்ற தோ்வில் 24 போ் முழு மதிப்பெண்கள் பெற்ற நிலையில், நிகழாண்டு இந்த எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.