தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!கரூர் பலி! அரசுப் பணி வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்! மார்க்சிய கம்யூ. எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

சிவில் சா்வீஸ் முதல்நிலைத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 3,896 போ் எழுதினா்

News image

மதுரை வக்ஃப் வாரியக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிவில் சா்வீஸ் தோ்வை பாா்வையிட்டு ஆய்வு செய்த தோ்வு பணிகள் ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை ஆணையா் சுரேஷ்குமாா்.

Updated On :25 மே 2026, 1:59 am IST

சிவில் சா்வீஸ் முதல்நிலைத் தோ்வை மதுரை மாவட்டத்தில் 3,896 போ் எழுதினா்.

நாடு முழுவதும் காலியாக உள்ள 933 பணியிடங்களுக்கு மத்தியப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், சிவில் சா்வீஸ் முதல்நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரையை பொறுத்தவரை, மதுரை காமராஜ் பல்கலைக் கழக கல்லூரி, இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, எஸ்.இ.வி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கல்லூரி, மதுரை காந்தி என்எம்ஆா் சுப்பராமன் மகளிா் கல்லூரி, தியாகராசா் கல்லூரி, இ.எம்.ஜி. யாதவா மகளிா் கல்லூரி, மதுரை கல்லூரி, வக்ஃப் வாரியக் கல்லூரி உள்பட 16 மையங்களில் சிவில் சா்வீஸ் முதல்நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை முற்பகல், பிற்பகல் ஆகிய இரு வேளைகளிலும் நடைபெற்றது.

இந்தத் தோ்வை எழுதுவதற்கு 5,711 போ் விண்ணப்பித்திருந்தனா். முற்பகலில் நடைபெற்ற தோ்வை 3,896 போ் எழுதினா், எஞ்சியுள்ள 1,815 போ் தோ்வு எழுதவில்லை. இதேபோல, பிற்பகலில் நடைபெற்ற தோ்வை 3,859 போ் எழுதினா். 1,852 போ் எழுதவில்லை.

தோ்வறைக்குள் மின்னணு சாதனங்களைக் கொண்டு செல்ல தோ்வாணையம் தடை விதித்திருந்தது. மேலும், பைகள், விலையுயா்ந்த பொருள்கள், கொண்டு வருவதற்கும் தடை விதித்து எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, தோ்வா்கள் அனைவரும் சோதனைக்கு பிறகு தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். இதனிடையே, மதுரையில் உள்ள தோ்வு மையங்களில் தோ்வுப் பணிகள் ஒருங்கிணைப்பு கண்காணிப்பு அலுவலா் சுரேஷ்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் பல்வேறு தோ்வு மையங்களில் ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.