எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!

அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றப்பட்டுள்ளது பற்றி...

News image

பேருந்துகளில் 'மகளிர் பயணம்' என பெயர் மாற்றம் - X

Updated On :9 ஜூலை 2026, 1:29 pm IST

தமிழகத்தில் பெண்களுக்கு கட்டணமில்லா அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது 'மகளிர் பயணம்' என மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் பெண்கள் கட்டணமில்லாமல் நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் 'மகளிர் விடியல் பயணத் திட்டம்' கொண்டு வரப்பட்டது. இதற்கு மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகும் இத்திட்டம் உள்பட முந்தைய திமுக அரசின் பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

இந்நிலையில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் அரசுப் பேருந்துகளில், அவர்கள் தெரிந்துகொள்ளும் விதமாக 'மகளிர் விடியல் பயணம்' என்று எழுதப்பட்டிருக்கும்.

'மகளிர் விடியல் பயணம்' என்ற இதன் பெயர் தற்போது 'மகளிர் பயணம்' என மாற்றப்பட்டுள்ளது. 'விடியல்' என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்த திட்டத்தின் பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முந்தைய திமுக அரசு கொண்டுவந்த 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரும் ’திறன் தமிழ்நாடு’ என சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Magalir Vidiyal Payanam scheme renamed on government buses

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.