தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம்!

நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது பற்றி...

News image

நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம் - x

Updated On :17 ஜூன் 2026, 1:00 pm IST

திமுக அரசால் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் ’திறன் தமிழ்நாடு’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ், கடந்த 2022 ஆம் ஆண்டு ’நான் முதல்வன் திட்டம்’ தொடங்கப்பட்டது.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், தொழில் வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், போட்டித் தேர்வுப் பயிற்சி, வேலைவாய்ப்பு முகாம்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

மேலும், யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது தவெக அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில், ’நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தின் பெயர் ‘திறன் தமிழ்நாடு’ (TN Skill) என்று மாற்றப்பட்டுள்ளது.

மேலும், மே 15 ஆம் தேதிக்கு முன்பு, கடந்த ஆட்சிக் காலத்தில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள், விடியோக்கள் உள்பட அனைத்து பதிவுகளும் எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Summary

Renaming of the 'Naan Mudhalvan' scheme!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.