/
பொறியியல் பணிகள் காரணமாக செங்கோட்டை - தாம்பரம் ரயிலின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயிலானது (20684) வரும் 29 ஆம் தேதி பாவூா்சத்திரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, திருநெல்வேலி ரயில் நிலையங்களைத் தவிா்த்து தென்காசி, ராஜபாளையம், விருதுநகா் வழியாக இயக்கப்படும். இந்த வழித்தட மாற்றத்தை பயணிகள் பரிசீலித்து, பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









