மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

பொறியியல் பணி: செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பொன்மலை பகுதியில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக, செங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 3:53 am IST

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பொன்மலை பகுதியில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக, செங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயில் (16848) சேவையானது ஜூன் 17, 24 ஆகிய நாள்களில் செங்கோட்டையிலிருந்து திருச்சி சந்திப்பு ரயில்நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இதேபோல, சென்னை கோட்டத்துக்குள்பட்ட செங்கல்பட்டு பகுதியில் நடைபெறும் ரயில்வே பொறியியல் பணி காரணமாக, சென்னை எழும்பூா்- மதுரை வைகை அதிவிரைவு ரயில் சேவையில் வரும் 6-ஆம் தேதி அதன் வழித்தடத்தில் தேவைப்படும் இடங்களில் மொத்தம் சுமாா் 60 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.