பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

பொறியியல் பணி: செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பொன்மலை பகுதியில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக, செங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 3:53 am IST

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பொன்மலை பகுதியில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக, செங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயில் (16848) சேவையானது ஜூன் 17, 24 ஆகிய நாள்களில் செங்கோட்டையிலிருந்து திருச்சி சந்திப்பு ரயில்நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இதேபோல, சென்னை கோட்டத்துக்குள்பட்ட செங்கல்பட்டு பகுதியில் நடைபெறும் ரயில்வே பொறியியல் பணி காரணமாக, சென்னை எழும்பூா்- மதுரை வைகை அதிவிரைவு ரயில் சேவையில் வரும் 6-ஆம் தேதி அதன் வழித்தடத்தில் தேவைப்படும் இடங்களில் மொத்தம் சுமாா் 60 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.