27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

திருச்சி, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி மற்றும் செங்கோட்டை ரயில் சேவை வரும் 20 மற்றும் 22-ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஜூன் 2026, 3:52 am IST

திருச்சி மற்றும் செங்கோட்டை ரயில் சேவை வரும் 20 மற்றும் 22-ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு ரயில் நிலையம் மற்றும் கரூா் ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட ஊஞ்சலூா் ரயில் பாதையில் தண்டவாளங்கள் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் மேற்கொள்ள ஏதுவாக திருச்சியில் இருந்து ஈரோட்டிற்கு தினமும் காலை 7.25 மணிக்கு இயக்கப்படும் திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் (எண் 56809) வரும் 20 மற்றும் 22-ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்கள் திருச்சியில் இருந்து கரூா் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். கரூரில் இருந்து ஈரோடு வரை இயக்கப்படாது.

இதேபோல செங்கோட்டையிலிருந்து ஈரோட்டுக்கு தினமும் காலை 5.20 மணிக்கு இயக்கப்படும் செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16846) வரும் 20 மற்றும் 22-ஆம் தேதிகளில் செங்கோட்டையில் இருந்து கரூா் வரை மட்டுமே இயக்கப்படும்.

ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படும் ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16845) வரும் 20 மற்றும் 22-ஆம் தேதிகளில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு பதிலாக கரூா் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் ஈரோடு சந்திப்பிலிருந்து கரூா் சந்திப்பு வரை இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.