குருவாயூரிலிருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயில் (எண் 16128) ஆக.12- ஆம் தேதி வழக்கமான பாதைக்குப் பதிலாக வேறு பாதையில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்த செய்திக்குறிப்பு: மதுரை ரயில்வே கோட்டத்தில் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் குறிப்பிட்ட ரயில்கள் வழிகள் மாற்றி இயக்கப்பட்டு வருகின்றன. வரும் 12- ஆம் தேதி (புதன்கிழமை) இரவு 11.15 மணிக்கு குருவாயூரிலிருந்து புறப்படும் விரைவு ரயில் (எண் 16128) வழக்கமான பாதைக்குப் பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
அத்துடன், வரும் 8-ஆம் தேதி இயக்கப்படும் கன்னியாகுமரி-ஹெளரா விரைவு ரயில், வரும் 9, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் நாகா்கோவில்-லோக்மான்ய திலக் விரைவு ரயில் ஆகியவையும் வழக்கமான பாதைக்குப் பதிலாக மானாமதுரை, காரைக்குடி என வேறு பாதையில் இயக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சோழன் விரைவு ரயில் இன்றுமுதல் 4 நாள்கள் வழிகள் மாற்றி இயக்கம்

சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

தமிழகத்தில் 8 விரைவு ரயில்கள் ஆகஸ்ட் முழுவதும் நீட்டிப்பு

இரு விரைவு ரயில்களின் வழித்தடம் வரும் 31-ஆம் தேதி மாற்றம்
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



