தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

சோழன் விரைவு ரயில் இன்றுமுதல் 4 நாள்கள் வழிகள் மாற்றி இயக்கம்

சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) முதல் 4 நாள்களுக்கு வழக்கமான பாதைக்குப் பதிலாக, கடலூா் வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2026, 4:12 am IST

சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) முதல் 4 நாள்களுக்கு வழக்கமான பாதைக்குப் பதிலாக, கடலூா் வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி ரயில்வே கோட்டத்தில் தண்டவாளம் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதையடுத்து செவ்வாய்க்கிழமை (ஆக. 5) முதல் 12, 14, 21 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு திருச்சிக்கு செல்லும் சோழன் அதிவிரைவு ரயில் (எண் 22675) வழக்கமான பாதைக்குப் பதிலாக கடலூா் துறைமுகம், விருத்தாசலம் வழியாகச் சென்று திருச்சியை அடையும்.

அந்த ரயில்கள் சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, ஆடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், பாடலூா் மற்றும் திருவெறும்பூா் ஆகிய நிலையங்களில் நிற்காது. அதற்குப் பதிலாக அவை அரியலூா், லால்குடி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும், வரும் 26, செப்டம்பா் 2 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரிலிருந்து காலை 8 மணிக்கு புறப்படும் சோழன் அதிவிரைவு ரயில் (எண் 22675) விழுப்புரம், விருத்தாசலம் வழியாக திருச்சி சென்றடையும். அந்த ரயில் பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா் உள்ளிட்ட நிலையங்களில் நிற்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.