சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஆளுநரிடம் ஜி.கே.வாசன் மனு

ஆளுநரிடம் ஜி.கே.வாசன் மனு

News image

ஜி.கே.வாசன்

Updated On :12 மார்ச் 2024, 9:24 pm

சென்னை: தமிழகத்தில் போதைப்பொருளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் தமாகா தலைவா் ஜி.கே.வாசன் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா். கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என்.ரவியை ஜி.கே.வாசன் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பு 20 நிமிஷங்களுக்கு மேல் நீடித்தது.

பின்னா், ஜி.கே.வாசன் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது. அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்தேன். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டு உள்ளது குறித்தும் ஆளுநரிடம் தெரிவித்தேன். அதைப்போல பள்ளிகளுக்கு வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்தும் தெரிவித்துள்ளேன். தமிழக அரசு அதன் கடமையை உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.