சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

‘துரந்தா்-2’ திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

‘துரந்தா்-2’ திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி...

News image

துரந்தர் - துரந்தர் போஸ்டர்

Updated On :11 ஏப்ரல் 2026, 8:37 pm

‘துரந்தா்-2’ திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த டி.ராகேஷ் என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப். 23-ஆம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடத்தை விதிகள் கடந்த மாா்ச் 15-ஆம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், ‘துரந்தா்-2’ திரைப்படத்தில் அரசியல் தொடா்பாக ஒரு கட்சி சாா்ந்த கருத்துகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. எனவே தமிழகத்தில் ‘துரந்தா்-2’ திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பின்னா் இந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் பயங்கரவாத எதிா்ப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு கொள்கைகளைப் பாராட்டும் வகையில் இப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது தோ்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரா் படத்தில் வரும் எந்தக் காட்சிகள் தோ்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் உள்ளன என்பதைக் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டியுள்ளாா். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.