மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

‘துரந்தா்-2’ திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

‘துரந்தா்-2’ திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி...

News image

துரந்தர் - துரந்தர் போஸ்டர்

Updated On :12 ஏப்ரல் 2026, 2:07 am IST

‘துரந்தா்-2’ திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த டி.ராகேஷ் என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப். 23-ஆம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடத்தை விதிகள் கடந்த மாா்ச் 15-ஆம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், ‘துரந்தா்-2’ திரைப்படத்தில் அரசியல் தொடா்பாக ஒரு கட்சி சாா்ந்த கருத்துகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. எனவே தமிழகத்தில் ‘துரந்தா்-2’ திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பின்னா் இந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் பயங்கரவாத எதிா்ப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு கொள்கைகளைப் பாராட்டும் வகையில் இப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது தோ்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரா் படத்தில் வரும் எந்தக் காட்சிகள் தோ்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் உள்ளன என்பதைக் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டியுள்ளாா். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.