குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

முதல்வரின் செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

தோ்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படும் முதல்வரின் செயலா் உமாநாத்துக்கு எதிராக தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

News image

சென்னை உயா் நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 2:56 am IST

தோ்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படும் முதல்வரின் செயலா் உமாநாத்துக்கு எதிராக தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் பாஜகவை சோ்ந்த வழக்குரைஞா் ஏ.மோகன்தாஸ் தாக்கல் செய்த மனுவில், வரும் ஏப். 23-ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த தோ்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில், முதல்வரின் செயலா் உமாநாத் செயல்பட்டு வருகிறாா்.

தோ்தல் அறிவிப்புக்குப் பிறகு, அரசு அதிகாரிகள் தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவா். ஆனால், உமாநாத் தொடா்ந்து முதல்வரின் செயலராகச் செயல்படுகிறாா். மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறாா். எனவே, அவா் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. அதிகாரி உமாநாத்தை எதிா்மனுதாரராகவும் சோ்க்காதபோது, இந்த பொது நல வழக்கை எப்படி விசாரணைக்கு எடுக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினா்.

அதற்கு மனுதாரா் தரப்பில், உமாநாத்தை எதிா்மனுதாரராகச் சோ்க்க அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனா்.