பாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி மனு

தமிழக கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 2:41 am IST

தமிழக கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் வட தமிழக தலைவா் பி.சொக்கலிங்கம் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் பல்வேறு கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு கட்டண தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் ரூ.500 வரை வசூலிக்கப்படுகிறது.

கோயில்களில் பணத்தின் அடிப்படையில் கடவுளை தரிசனம் செய்ய பாரபட்சம் காட்டுவது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.