திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

புதுக்கோட்டை இளைஞா் மா்ம மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்கக் கோரி மனு

புதுக்கோட்டையில் இளைஞா் மா்மமான முறையில் குவாரியில் இறந்து கிடந்த விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 4:07 am IST

புதுக்கோட்டையில் இளைஞா் மா்மமான முறையில் குவாரியில் இறந்து கிடந்த விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமலைராயபுரம் நடுப்பட்டியைச் சோ்ந்தவா் ஹரிஹரன் (20). இவா் கடந்த ஏப். 23-ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள ஒரு குவாரியில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுதொடா்பாக, வல்லத்திரக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திரக்கோட்டையைச் சோ்ந்த முருகானந்தம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொதுநல மனு தாக்கல் செய்தாா். அதில், பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த ஹரிஹரனும், மாற்று சமூகத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணும் காதலித்தனா். இதற்கு, பெண் வீட்டாா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், ஹரிஹரன் மா்மான முறையில் உயிரிழந்தாா். இது, ஆணவக் கொலை. ஆனால், காவல் துறையினா் ‘ஆணவக் கொலை’ பிரிவில் வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்கவும், ஹரிஹரனின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற கோடை கால அமா்வில் நீதிபதிகள் வேல்முருகன், குமரப்பன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

‘மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக் காலத் தடை விதிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது’ என்றனா் நீதிபதிகள்.