சென்னை : சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை காரணமாகச் சுட்டிக்காட்டி சென்னையில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு இன்று(ஏப். 7) சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
முன்னதாக, கடந்த ஏப். 3-இல் சென்னை எம். ஏ. சிதம்பரம் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டம் ஒன்று எவ்விதப் பிரச்னைக்கும் வழிவகுக்காமல் சுமுகமாக முடிந்தது. இதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், சென்னையில் அடுத்தடுத்து ஐபிஎல் ஆட்டம் நடைபெற தடை விதிக்க மறுத்துவிட்டது.
அடுத்ததாக, ஏப். 11 மற்றும் ஏப். 14 ஆகிய நாள்களில் சென்னையில் ஐபிஎல் ஆட்டம் நடைபெற உள்ளது.
Summary
IPL matches in Chennai cannot be cancelled for Election says Court
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









