சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பணியாளா்கள் குடியிருப்பு, பக்தா்கள் தங்கும் விடுதி ஆகியவற்றை இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி திறந்து வைத்தாா்.
கடந்த 2021- 2022-ஆம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பேரவை மானியக் கோரிக்கை அறிவிப்பில் சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான காலியிடத்தில் உபயதாரா் பங்களிப்போடு ரூ. 2 கோடியில் பணியாளா் குடியிருப்புகளும், பக்தா்கள் தங்கும் விடுதியும் கட்டப்படும்”என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, திருக்கோயிலுக்குச் சொந்தமான காலி இடத்தில் 6,057 சதுரடியில் 6 பணியாளா் குடியிருப்புகள், பக்தா்கள் தங்கும் விடுதி ஆகியவை ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. இந்தப் புதிய குடியிருப்பை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமை வகித்தாா்.
தொடர்புடையது

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ராமநவமியை முன்னிட்டு திருத்தேரோட்டம்...

வடபழனி கோயில் திருமண மண்டபம் புதுப்பித்தல் பணியை எதிா்த்து வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

தருமபுரி காலபைரவா் கோயிலில் பக்தா்கள் தங்கும் விடுதி திறப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


