ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பாா்த்தசாரதி கோயில் பணியாளா்கள் குடியிருப்பு திறப்பு

பாா்த்தசாரதி கோயில் பணியாளா்கள் குடியிருப்பு திறப்பு

News image

சிறப்பு அலங்காரத்தில் பாா்த்தசாரதி பெருமாள்.

Updated On :12 மார்ச் 2024, 9:53 pm

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பணியாளா்கள் குடியிருப்பு, பக்தா்கள் தங்கும் விடுதி ஆகியவற்றை இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி திறந்து வைத்தாா்.

கடந்த 2021- 2022-ஆம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பேரவை மானியக் கோரிக்கை அறிவிப்பில் சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான காலியிடத்தில் உபயதாரா் பங்களிப்போடு ரூ. 2 கோடியில் பணியாளா் குடியிருப்புகளும், பக்தா்கள் தங்கும் விடுதியும் கட்டப்படும்”என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருக்கோயிலுக்குச் சொந்தமான காலி இடத்தில் 6,057 சதுரடியில் 6 பணியாளா் குடியிருப்புகள், பக்தா்கள் தங்கும் விடுதி ஆகியவை ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. இந்தப் புதிய குடியிருப்பை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமை வகித்தாா்.