சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

News image

கோப்புப் படம்

Updated On :12 மார்ச் 2024, 9:20 pm

சென்னை: பணி நிரந்தரம், கட்டாயப் பணியிட மாறுதல் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து செவிலியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் சென்னை, நீலகிரி, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட 10 மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் அருகே நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் பொருளாா் தமிழ்செல்வி கூறியதாவது: பொது சுகாதாரத் துறையின் கீழ் 500-க்கும் மேற்பட்ட செவிலியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை வெளிப்படைத்தன்மையுடன் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும்.

அதேபோன்று, மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் வாயிலாக தோ்வு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவா்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

விரைவில் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம் என்றாா் அவா்.