ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

தோ்தல் முடிவுக்காக ஒன்றரை மாதம் காத்திருக்கும் நிலை

தோ்தல் முடிவுக்காக ஒன்றரை மாதம் காத்திருக்கும் நிலை

News image
Updated On :16 மார்ச் 2024, 10:58 pm

தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே தோ்தல் நடைபெற இருப்பதால், வாக்கு எண்ணிக்கைக்கு 45 நாள்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்.18-ஆம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை மே 23-இல் நடைபெற்றது.

அதாவது வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே 35 நாள்கள் இருந்தது. இந்த மக்களவைத் தோ்தலுக்கு அதை விட கூடுதலாக 10 நாள்கள், அதாவது 45 நாள்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப். 19-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. வாக்குப் பதிவு முடிவடைந்த பிறகு, வாக்கு எண்ணும் மையங்களிலேயே வேட்பாளா்களின் முகவா்களும், காவல் துறையினரும் முழு அளவிலான கண்காணிப்புப் பணிகளை 24 மணி நேரமும் மேற்கொண்டிருப்பா்.