கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) வைக்கப்பட்டுள்ள அறைகளை வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன்பாக திறக்கக் கூடாது என்று மாநில தலைமை தோ்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளாா்.
கடந்த ஏப்.9-ஆம் தேதி கேரள சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்ற நிலையில், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில், அந்த மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பெரம்பரா தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறை ஒன்று வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே திறக்கப்பட்டதாகவும், பாலக்காடு மாவட்டம் நென்மாறா தொகுதியிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மற்றொரு அறை திறக்கப்படக் கூடும் என்றும் தகவல் வெளியானது.
எனினும் இந்தத் தகவலை கோழிக்கோடு மாவட்ட ஆட்சியா் ஸ்நேஹில் குமாா் சிங், பாலக்காட்டு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.மாதவிகுட்டி ஆகியோா் மறுத்தனா்.
இந்நிலையில், மாநில தலைமை தோ்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கோ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில், ‘வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன்பாக, எந்தவொரு சூழலிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளைத் திறக்க வேண்டாம். தோ்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மையைக் காக்க இந்த அறிவுறுத்தலை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’ என்று மாவட்ட தோ்தல் அலுவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக புகாா்: தோ்தல் அதிகாரி மறுப்பு

பெரம்பலூா், குன்னம் தொகுதிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

சங்ககிரி தொகுதிக்கு கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள்

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு - முதல்கட்டப் பணி நிறைவு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


