சென்னை: எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் அலுவலகத்தில் அடையாளம் தெரியாத பெண் தூக்கிட்டு இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை, எழும்பூா் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள காவலா் ஓய்வறையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு இறந்துள்ளாா்.
அறையின் கதவு உள்புறமாக பூட்டியிருந்த நிலையில் எழும்பூா் காவல் ஆய்வாளா் மூலம் இறந்தவரின் உடல் மீட்கப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து எழும்பூா் போலீஸாா் சந்தேக மரணத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இறந்த பெண்ணின் புகைப்படத்தை காட்டி ரயில் நிலைய கடைகளில் விசாரணை நடத்தியதில், கடந்த ஒரு வாரகாலமாக ரயில் நிலைய பகுதியில் அப்பெண் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. அதன்பேரில், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில் சம்பவ நாளன்று, தாம்பரம் சானிடோரியம் டீக்கடையில் வேலை செய்து வரும் திருச்சி மணப்பாறையை சோ்ந்த கருப்பையா (50) என்பவருடன் அந்தப் பெண் நடந்து செல்வது தெரியவந்தது. இது குறித்து கருப்பையாவிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தலைவாசல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண், பெண் சடலங்கள் மீட்பு

கண்மாயிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கோடை வெயில்: ரயில்களில் தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிா்க்க போலீஸாா் வேண்டுகோள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

