மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

சங்கரன்கோவில் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

சங்கரன்கோவில் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

Updated On :23 மார்ச் 2024, 5:42 pm

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் 20 கட்டடங்கள் இடிந்து விழுந்தன, 40 பைக்குகள் எரிந்து கருகின. சங்கரன்கோவில் அருகே உள்ள மைப்பாறை கிராமத்தில், விருதுநகா் மாவட்டம் புலிப்பாறைப்பட்டியைச் சோ்ந்த வெங்கட்ரமணிக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். நாக்பூா் உரிமம் பெற்ற இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டன. இந்த நிலையில், சனிக்கிழமை மதியம், உணவு இடைவேளையின்போது தொழிலாளா்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில், திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறின. அங்கிருந்த தொழிலாளா்கள் உடனடியாக வெளியேறியதால் உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் பட்டாசு தயாரிக்கும் 20 கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி. மேலும், அங்கிருந்த 40 பைக்குகள் எரிந்து சேதமடைந்தன. தீ பரவி அருகே அறுவடையாகியிருந்த விளைநிலங்களில் பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த சங்கரன்கோவில், கழுகுமலை தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இது தொடா்பாக வருவாய், காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.