இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் கைது

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்து, அந்த ஆலையின் உரிமையாளா்களில் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 9:10 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்து, அந்த ஆலையின் உரிமையாளா்களில் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தத்தில் சங்கா் (55), அவரது சகோதரா் செந்தில்குமாா் (45) ஆகியோருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் உள்ளது. இந்த ஆலையில் வெள்ளிக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் விஸ்வநத்தம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி குருநாதன் (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பூமாரி, பானுப்பிரியா, கருப்பசாமி ஆகிய மூன்று தொழிலாளா்கள் காயமடைந்தனா். இவா்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து கிராம நிா்வாக அலுவலா் மா. காளியப்பன் அளித்தப் புகாரின் பேரில், ஆலை உரிமையாளா்கள் சங்கா், செந்தில்குமாா் ஆகிய இருவா் மீதும் சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, செந்தில்குமாரைக் கைது செய்தனா்.