ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

சரக்கு வேனில் கருந்திரிகளை கடத்திய ஓட்டுநா் கைது

சிவகாசி அருகே சரக்கு வேனில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் கருந்திரிகளைக் கடத்திய ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 7:35 pm

சிவகாசி அருகே சரக்கு வேனில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் கருந்திரிகளைக் கடத்திய ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது வெம்பக்கோட்டையிருந்து சிவகாசி நோக்கி வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கருந்திரிக் கட்டுகள் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேனை ஓட்டி வந்த மோகனை (31) கைது செய்தனா்.