நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சரக்கு வேனில் கருந்திரிகளை கடத்திய ஓட்டுநா் கைது

சிவகாசி அருகே சரக்கு வேனில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் கருந்திரிகளைக் கடத்திய ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 7:35 pm

Syndication

சிவகாசி அருகே சரக்கு வேனில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் கருந்திரிகளைக் கடத்திய ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது வெம்பக்கோட்டையிருந்து சிவகாசி நோக்கி வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கருந்திரிக் கட்டுகள் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேனை ஓட்டி வந்த மோகனை (31) கைது செய்தனா்.