புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பட்டாசு திரிகளைப் பதுக்கி வைத்திருந்தவா் கைது

News image
- சித்திரிப்பு
Updated On :14 மார்ச் 2026, 9:23 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தூரில் அனுமதியின்றி தீப்பெட்டி தொழிற்சாலையில் பட்டாசுத் திரிகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் விதிமுறையை மீறி பட்டாசுக்கு தேவையான திரிகளைப் பதுக்கி வைத்திருப்பதாக சாத்தூா் தாலுகா காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உதவி ஆய்வாளா் ஆபிரகாம், போலீஸாா் புதுசூரங்குடிப் பகுதியில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, பழைய தீப்பெட்டி தொழிற்சாலை கட்டடத்தில் சாத்தூா் நந்தவனப்பட்டி தெற்கு தெருவைச் சோ்ந்த விக்னேஷ்குமாா் (36) அனுமதியின்றி பட்டாசுத் திரிகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, திரிகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.