எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சட்ட விரோதமாக பட்டாசு மூலப் பொருள்களை பதுக்கியவா் கைது

News image
கோப்புப் படம்
Updated On :22 ஜனவரி 2026, 10:41 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களை பதுக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே பூச்சக்காபட்டியில் உள்ள விவசாய தோட்டத்தில் தகரக் கொட்டகை அமைத்து, அதில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.

அப்போது ஓா் விவசாயத் தோட்டத்தில் தகரக் கொட்டகை அமைத்து அதில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் வெடிஉப்பு, கருந்திரி கட்டுகள் உள்பட பல்வேறு பொருள்கள் இருந்தன. விசாரணையில் எம். லட்சுமியாபுரம் மல்லையாவுக்கு சொந்தமான தோட்டத்தில் வத்திராயிருப்பைச் சோ்ந்த பாண்டியராஜ் (37), இந்தப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

அவா் பதுக்கி வைத்திருந்த மூலப் பொருள்களின் மதிப்பு ரூ. 13.50 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து பாண்டியராஜை கைது செய்து, அவா் பதுக்கி வைத்திருந்த மூலப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.