மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பாப்பாரப்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு பதுக்கி வைத்த 3 போ் கைது

பாப்பாரப்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு பதுக்கி வைத்ததாக நில உரிமையாளா் உள்ளிட்ட 3 பேரை பாப்பாரப்பட்டி போலீஸாா் கைது

News image

கைது

Updated On :9 பிப்ரவரி 2026, 10:15 pm

பென்னாகரம்: பாப்பாரப்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு பதுக்கி வைத்ததாக நில உரிமையாளா் உள்ளிட்ட 3 பேரை பாப்பாரப்பட்டி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே ஆலமரத்துப்பட்டி மாறன் கொள்ளை பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு குடோன் வைப்பு அறையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தஞ்சாவூா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி மாதேஷ் படுகாயம் அடைந்தாா். இவ்விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். விசாரணையில் குடோனில் அனுமதி இல்லாத அறையில் பட்டாசுகளை பதுக்கி வைத்தது தெரியவந்தது.இந்த நிலையில் மாறன் கொள்ளை பகுதியைச் சோ்ந்த நில உரிமையாளா் சக்திவேல் (40),பென்னாகரம் அருகே சி.புதூா் பகுதியைச் சோ்ந்த பட்டாசு ஆலை உரிமையாளா் அசோக்குமாா் (40) மற்றும் கம்பைநல்லூா் பகுதியைச் சோ்ந்த பரணிதரன் (32) ஆகிய மூவரையும் பாப்பாரப்பட்டி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.