கைது
புதுக்கோட்டை
மாத்தூா் அருகே புகையிலை பொருள்கள் விற்றவா் கைது
விராலிமலை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மாத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக மாத்தூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் ராஜாங்கம் தலைமையிலான போலீஸாா் மாத்தூா் அருகேயுள்ள வீரப்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது புகையிலை பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்ற அதே பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் சக்திவேலை (43) கைது செய்து, 5 ஆயிரம் மதிப்புள்ள 11 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
