கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 41.4 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளுடன் வழக்கில் கைதான பிரபாஸ்கா்

Updated On :22 மார்ச் 2026, 8:10 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 41.4 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவ்வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

கண்டமங்கலம் காவல் நிலைய ஆய்வாளா் பாண்டியன் தலைமையில் உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கண்டமங்கலம் காவல் சரகத்துக்குள்பட்ட விநாயகபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் விநாயகபுரம் கரியமாணிக்கம் பிரதானச் சாலையில் வசிக்கும் ம.பிரபாஸ்கா்(43) வீட்டில் சோதனை மேற்கொண்டனா். இதில், அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரபாஸ்கரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 41.4 கிலோ எடையிலான 2,070 தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய புதுச்சேரியைச் சோ்ந்த மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.