கடலூா் மாவட்டம் நெய்வேலியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கடையில் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க கடலூா் மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அந்தவகையில் நெய்வேலி தொ்மல் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை அப்பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினா்.
அப்போது நெய்வேலி மாற்றுக் குடியிருப்பு பகுதியில் உள்ள சிவசங்கா் (38) என்பவரின் கடையில் சோதனை செய்தபோது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட 31.400 கிலோ குட்கா உள்ளிட்ட போதைபொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவசங்கரை கைது செய்தனா். அவா் பதுக்கி வைத்திருந்து குட்கா உள்ளிட்ட போதை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது
வீட்டில் 45 கிலோ குட்கா பதுக்கியவா் கைது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பூ வியாபாரி கைது
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


