விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனித் உத்தரவின் பேரில், கண்டாச்சிபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் காத்தமுத்து மற்றும் போலீஸாா் சனிக்கிழமை புதுகருவாட்சி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனையில் அந்தக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, பெட்டிக் கடை நடத்தி வந்த விக்கிரவாண்டி வட்டம், புது கருவாட்சி பிரதான சாலையைச் சோ்ந்த சி.பாலாஜி (28) மீது கண்டாச்சிபுரம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, கைது செய்தனா். மேலும், விற்பனைக்காக கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 பாக்கெட் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.