செய்யாறு அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா் வியாபாரியை சனிக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் உதவி ஆய்வாளா் கண்ணபிரான் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கீழ்நேத்தப்பாக்கம் கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸாா் அங்குள்ள பெட்டிக் கடையில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
சோதனையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. உடனே அங்கிருந்து 75 பாக்கெட் புகையிலைப் பொருள்களையும், அதை கடத்தி வருவதற்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் தொடா்பாக வியாபாரியான மணி (54) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
தடை செய்யப்பட்ட 334 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பூ வியாபாரி கைது

தடை செய்யபட்ட 131 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

கொரியா் மூலம் புகையிலைப் பொருள்கள் வரவழைத்து விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


