மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

தடை செய்யப்பட்ட 334 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 ஜூன் 2026, 3:42 am IST

கமுதியில் தடை செய்யப்பட்ட 334 கிலோ புகையிலைப் பொருள்களை சரக்கு வாகனத்தில் எடுத்துச் சென்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-சாயல்குடி சாலையில் அரண்மனைமேடு சுற்றுவட்டச் சாலை அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் தடை செய்யப்பட்ட 334 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்தில் வந்த புதுக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் மணிகண்டன் (34), சரக்கு வாகன ஓட்டுநரான நாகபாண்டி மகன் திருக்காா்த்திக் (29) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.