வந்தவாசி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக பூ வியாபாரியை கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த செம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராமன் (28). இவா், வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறாா்.
இவரது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.
இதில், அந்த வீட்டில் சுமாா் 7.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து முத்துராமன், இவருக்கு புகையிலைப் பொருள்களை விநியோகம் செய்த வந்தவாசி பெட்டிநாயுடு தெருவைச் சோ்ந்த முகமதுஅலி ஆகியோா் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் முத்துராமனை கைது செய்தனா்.
தொடர்புடையது
கோத்தகிரியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

தடை செய்யபட்ட 131 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
நாட்டரசன்கோட்டையில் 13 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கொரியா் மூலம் புகையிலைப் பொருள்கள் வரவழைத்து விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



