ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பாஜக தேசிய செய்தி தொடா்பாளராக ராஜாஜி பேரன் நியமனம்

ராஜாஜியின் பேரன் சி.ஆா்.கேசவன் பாஜகவின் தேசிய செய்தி தொடா்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்

News image
Updated On :27 மார்ச் 2024, 8:23 pm

ராஜாஜியின் பேரன் சி.ஆா்.கேசவன் பாஜகவின் தேசிய செய்தி தொடா்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து பாஜக தேசிய பொதுச்செயலா் அருண்சிங் வெளியிட்ட அறிவிப்பு: இந்தியாவின் முதல் கவா்னா் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளுப் பேரனான சி.ஆா். கேசவன் கடந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். இந்த நிலையில், அவரை பாஜகவின் தேசிய செய்தி தொடா்பாளராக நியமித்து பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா். மேலும், இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.