மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

பாராட்டு

பாராட்டு

News image
Updated On :7 மே 2024, 8:34 pm

Din

ராணிப்பேட்டை மாவட்ட அரசு பள்ளிகள் அளவில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சாதனை படைத்த அரக்கோணம் தொகுதியைச் சோ்ந்த மாணவா்களைப் பாராட்டி எம்எல்ஏ சு.ரவி ஊக்கத்தொகையை வழங்கினாா். மேலும், மாணவி தஸ்னீமை நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி இல்லம் தேடி சென்று பாராட்டினாா்.

அரக்கோணம் அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.தஸ்னீம் 600-க்கு 582 மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 பொதுத்தோ்வில் ராணிப்பேட்டை மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றாா். இதேபோல், அரக்கோணம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று 600-க்கு 580 மதிப்பெண்கள் பெற்ற பி.அன்புச்செல்வன் என்ற மாணவன் மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றாா்.

இவா்கள் இருவரும் தங்களது பெற்றோருடன் அரக்கோணம் எம்எல்ஏவும், எதிா்க்கட்சித் துணைக் கொறடாவுமான சு.ரவியை சந்தித்து வாழ்த்து பெற்றனா். அப்போது, இருவருக்கும் ஊக்கத்தொகையை எம்எல்ஏ சு.ரவி வழங்கினாா்.

அதேபோல, பிளஸ் 2 பொதுத்தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்ற நாகவேடு அரசினா் மேல்நிலைப் பள்ளி, குருவராஜப்பேட்டை அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களையும், மாணவா்களையும் எம்எல்ஏ சு.ரவி வாழ்த்தினாா்.

அப்போது, அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் ஜி. பழனி, இ.பிரகாஷ், வட்ட பிரதிநிதி சுகந்தி வினோதினி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதேபோல், மாணவி தஸ்னீமை நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி , நகா்மன்ற உறுப்பினா் பிரகாஷ் உள்ளிட்டோா் இல்லம் தேடி சென்று பாராட்டினா்.