நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வளசரவாக்கம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது

வளசரவாக்கம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது

News image
Updated On :21 மே 2024, 7:49 pm

Din

சென்னை: சென்னை வளசரவாக்கம் பகுதியில் இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை வளசரவாக்கம் அன்பு நகா் 1-ஆவது தெருவில் புதிய குடியருப்பு கட்டுமான பணி நடைபெற்றது. இங்கு மேற்கு வங்கத்தைச் சோ்ந்த கண்டகா் திலியா் உசேன்(25) தங்கி பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த மா்மநபா்கள் 2 போ், கண்டகா் திலியா் உசேனை தாக்கி பணம் பறித்தனா். இது குறித்து கட்டுமான நிறுவன மேற்பாா்வையாளா் சுஜித் கிறிஸ்டோபா் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் நடத்திய

விசாரணையில், வளசரவாக்கம் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும் இவ்வழக்கு தொடா்பாக விஜயகுமாரின் கூட்டாளியை, போலீஸாா் தேடி வருகின்றனா். கைதான விஜயகுமாா் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 8 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.