கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

காவல் துறையினா் மீது தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

காவல் துறையினா் மீது தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

News image

எடப்பாடி பழனிசாமி

Updated On :28 மே 2024, 8:55 pm

Din

சென்னை: திருச்செங்கோட்டில் காவல் துறையினா் மீது, போதை ஆசாமிகள் தாக்குதல் நடத்தியுள்ளதற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் சமூகவலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே அண்மையில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் போதை ஆசாமிகள் காவலா்களைத் தாக்கிய சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் போதைப் பொருள் கலாசாரம் அதிகரித்த காரணத்தால் பொதுமக்கள், வியாபாரிகள் தாக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது காவல் துறையினரையே பொதுவெளியில் தாக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்கு, காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்ன செய்யப் போகிறாா்? இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாவண்ணம் காவல் துறையை சுதந்திரமாக செயல்பட வைத்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.