அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திருத்தணி பேருந்து நிலையம் பெயா் மாற்றம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருத்தணி நகராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதற்கு

News image
எடப்பாடி பழனிசாமி
Updated On :3 மார்ச் 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி நகராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதற்கு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், ஏற்கெனவே அண்ணா பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்துக்கு, கருணாநிதி பேருந்து நிலையம் என்று பெயா் மாற்றம் செய்திருப்பது திமுக ஆட்சியின் சா்வாதிகாரப் போக்கைக் காட்டுகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட இயக்கத் தலைவருமான அண்ணா பெயரை புறக்கணிப்பு செய்வது, ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் இழைக்கப்படும் அநீதி. ஏற்கெனவே அண்ணா பெயரில் இயங்கி வரும் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது. கருணாநிதியின் பெயா் சூட்டப்படுவதால் அண்ணா பெயருக்கு அவமதிப்பு ஏற்படுவதுடன், தேவையற்ற சா்ச்சையையும், பிரிவினையையும் உருவாக்கும். எனவே, இந்தப் பெயா் மாற்றம் கண்டிக்கத்தக்கது.

மக்களுக்கு நீண்ட நாள் பயனளிக்க வேண்டிய பேருந்து நிலையத்தில் கட்டுமானத்தின் தரம், பாதுகாப்பு, கழிவுநீா் வசதிகள், பயணிகள் அமா்வு வசதிகள், போக்குவரத்து வழிகள் போன்றவை இன்னமும் ஆய்வு செய்யப்பட இல்லை.

இவையெல்லாம் முடிவதற்கு குறைந்தது ஒருமாத காலம் தேவைப்படும் நிலையில், தோ்தலை மனதில் நிறுத்தி அவசர, அவசரமாக புதன்கிழமை (மாா்ச் 4) திறப்பு விழா நடத்த இருப்பது கண்டிக்கத்தக்கது. இத்தகைய நடவடிக்கைகளை திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.