திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

தொழில்போட்டியில் காரை ஏற்றி கொல்ல முயற்சி: துணிக்கடை உரிமையாளா் கைது

வேளச்சேரியில் தொழில் போட்டி காரணமாக துணிக்கடை உரிமையாளரைக் காரை ஏற்றிக் கொலை செய்ய முயற்சித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :5 நவம்பர் 2024, 3:42 am IST

சென்னை: வேளச்சேரியில் தொழில் போட்டி காரணமாக துணிக்கடை உரிமையாளரைக் காரை ஏற்றிக் கொலை செய்ய முயற்சித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை வேளச்சேரி விஜயநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபஸ்டின்(38). இவா் வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில் வீட்டின் கீழ் தளத்தில் துணிக்கடை நடத்தி வருகிறாா். நாம் தமிழா் கட்சியின் வேளச்சேரி தொகுதி பொறுப்பாளராகவும் இருந்து வருகிறாா். அதே பகுதியில் இவருடைய கடைக்கு எதிரே துணிக் கடையை நடத்தி வருபவா் சிவகுமாா்(40).

கடந்த சில மாதங்களாகவே சிவகுமாருக்கும் ஜெபஸ்டினுக்கும் தொழில் போட்டி இருந்து வருகிறது. ஜெபஸ்டின் தனது கடையை சமூக வலைதளங்களில் ப்ரமோட் செய்யவே தீபாவளிக்கு அவருடைய கடைக்கு கூட்டம் அதிகமாக வந்ததாகவும், ஏற்கனவே தொழில் போட்டியில் கோபத்தில் இருந்த சிவகுமாருக்கு தீபாவளி விற்பனை மந்தமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற சிவகுமாா், ஜெபஸ்டினின் கடைக்கு வெளியே காரில் வந்து நின்றாா்.

இதைப் பாா்த்த ஜெபஸ்டின் கடைக்கு முன் உள்ள காரை நகற்றி விடுமாறு கூறினாா். காரை பின்னால் எடுப்பது போல் சென்ற சிவக்குமாா், திடீரென காரை முன் நோக்கி கொண்டு வந்து ஜெபஸ்டினின் மீது ஏற்றுவது போல் சென்றாா். இதைக் கண்டு சுதாரித்த ஜெபஸ்டின் நகா்ந்ததும் கடைக்குள் காா் சென்றது. இதில் கடையின் கண்ணாடி உடைந்து பொருட்கள் சேதமடைந்தன. மேலும் சிவகுமாா், ஜெபஸ்டினை மிரட்டி விட்டுச் சென்ாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின்பேரில் வேளச்சேரி போலீசாா் வழக்குப் பதிவு செய்து சிவகுமாரை கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.