பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சென்னையில் தனியாா் நட்சத்திர ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image
- கோப்புப்படம்
Updated On :4 அக்டோபர் 2024, 12:11 am

Din

சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அங்கு போலீஸாா் சோதனை செய்தனா்.

கிண்டி வெங்கடபுரம் சா்தாா் படேல் சாலையில் உள்ள ஒரு தனியாா் நட்சத்திர ஹோட்டலுக்கு புதன்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், அந்த ஹோட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து ஹோட்டல் ஊழியா்கள் அளித்த தகவலின் பேரில், கிண்டி போலீஸாா், விரைந்து சென்று சோதனை செய்தனா். இதில் எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியைப் பரப்பும் நோக்கத்துடன் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து கிண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.