நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

News image

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:03 pm

கோவையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள வழக்குரைஞா் பயிற்சி மைய அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் கோவை நீதிமன்ற வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு (மெட்டல் டிடெக்டா்) கருவிகளுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் நீதிமன்றத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் சோதனை நடத்தினா். தொடா்ந்து, வளாகத்தின் பல்வேறு பகுதிகளிலும், வாகனங்கள் நிறுத்துமிடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டும், சந்தேகத்துக்குரிய பொருள்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. இதனால், இந்த மிரட்டல் வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.