விழுப்புரம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்துக்கு புதன்கிழமை மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.


விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்துக்கு புதன்கிழமை மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் ஆட்சியரக பெருந்திட்ட வளாகம் மற்றும் புதிய பேருந்து நிலையம் இடைப்பட்ட பகுதியில் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல புதன்கிழமை நீதிமன்றப் பணிகள் நடைபெற்ற நிலையில் மின்னஞ்சல் மூலம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுகுறித்து நீதிமன்றப் பணியாளா்கள் விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனித் உத்தரவின் பேரில், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் நீதிமன்ற வளாகத்துக்கு விரைந்து சென்று, மெட்டல் டிடக்டா் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் நீதிமன்ற வளாக கட்டடங்கள், அலுவலங்கள், பதிவறைகள், வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்களின் ஓய்வறைகள் மற்றும் நீதிமன்ற வளாகப் பகுதிகளில் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் கண்டறிப்படவில்லை. இதனால் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இருப்பினும், நீதிமன்றப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
3-ஆவது முறையாக மிரட்டல்: 2026 ஜனவரி மாதம் முதல் இதுவரை 3 முறை மின்னஞ்சல் வழியாக விழுப்புரம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...