சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 45க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை நீதிமன்ற அலுவலகத்துக்கு வந்த இ-மெயிலில், ‘நீதிமன்றத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் வெடிக்கும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மோப்பநாய் உதவியுடன், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணா்கள் அடங்கிய குழுவினா் நீதிமன்றம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதுகுறித்து இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்ட இ-மெயில் முகவரியின் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஏற்கெனவே கடந்த ஜனவரியில் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

விழுப்புரம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

பெரம்பலூா் நீதிமன்றத்துக்கு 4-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

அரக்கோணம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


